இன்று முதல்
விடியலை நீ எழுப்பு...
பகல் ரெண்டு கேள்
பகை மட்டும் பாடு...
வரனுக்கு மையம் பார்
காற்றுக்குக் கால்கள் பார்...
இதயம் போல் உழை
இமைகள் போல் களை...
உன்னிடம் நியாயம் கேள்
உலகுக்குத் தீர்ப்பு சொல்...
காற்றை வடிகட்டு
கடலை வாய் கொப்பளி...
நிலவை நிறம் மாற்று
நிலத்தை விரிவு செய்...
ஐந்தாவது வேதம் சொல்
ஆறாவது பூதம் கேள்...
ஏழாவது அறிவைத் தேடு
எட்டாவது பிறவி எடு...
ஒன்பதாவது திசையைத் திற
பத்தாவது கிரகம் பற...
பட்டாம்பூச்சிக்கு பண்ணை வை
பருவம் முதிராமல் முறையிடு...
பூமியின் வேகம் கேள் !
அதற்கு முன் ஓடு !
நட்சத்திரங்களின் தூரம் கேள்
நடந்து போகப் பழகு...
உலகுக்கு வெளியே ஒரு
ஓய்வறை கட்டு...
பூமியின் தலையில்
போடு ஒரு குட்டு...
தொடரும்
மன்னித்துக்கொள்...காதலா!!! இடியின் மழையா காதலா..?
விட்டுவிடு உன் கோவமதை..! 

வேண்டாம் என்மேல் அன்பே!
உன் பிரிவில் மட்டும்
விழிகளுக்குள் வியர்வை ஏன்?
எப்போதும் இனிமையாக இருந்தேன்...!
இன்றுதான் உணர்ந்தேன் நீயில்லாத வெறுமை!!!
நானும் தொலைத்து நிற்கிறேன்...!
அன்று போலில்லை நீ இன்று!!! என் இதய உயிர்..!
இனியாவது இதயத்தில் உதித்த காதலை...!
உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வா காதலா!
என் கனவு நனவாகா! பாவியிவளை கட்டியணை!!!
என் பெரிய சோகங்களை
கண்ணீரோடு எழுதினேன்...
என் தாகத்தை தணித்து
சோகத்தை அவை உள்வாங்கின.!!!
காதலா! காதலா !
உன் நினைவுகளைக் கட்டிக் கொண்டு
தூங்கி விட முடிகிறது என்னால்...!
என் உயிர்காதலா
paarvaiyilae sila nimidam unnoadu naan irundha ovvoru maNi thuLiyum edhu jnayam paavam iruvarukkum thoandravillai acham kaLaindhaen aasaiyinai nee aNaithaay kaNda thirukoalam kanavaaga maRaindhaal unnoadu naan irundha ovvoru maNi thuLiyum
unnoadu naan irundha ovvoru maNi thuLiyum
maraNa padukkaiyilum maRakkaadhu kaNmaNiyae
thonnooRu nimidangaL thottaNaitha kaalam dhaan
ennooRu aaNdugaLaai idhayathil kalangudhadi
bayathoadu sila nimidam
katti aNaithabadi kaNNeeril sila nimidam
ilakkaNamae paaraamal
ella idangaLilum muththangaL vidhaitha moahathil sila nimidam
maraNa padukkaiyilum maRakkaadhu kaNmaNiyae
adu irava adhu pagala adhai patri aRiyavillai
yaar thodanga? yaar mudikka? oru vazhiyum thoandravillai
iruvarumae thodangivittoam idhu varaikkum kaeLvi illai
aadai kaLaindhaen vetkathai nee aNaithaay
kadaisiyil azhudha kaNNeer kaiyil innum ottudhadi
maraNa padukkaiyilum maRakkaadhu kaNmaNiyae (2)

எதையோ நினைத்தபடி
கால்கள் நடந்தன
மெல்லிய தென்றல்
மெதுவாய்த் தழுவி
மௌனமாய் சென்றது
மனசுக்குள் ஓர் விறுவிறுப்பு
எதை பார்த்தாலும்
சோபையிழந்த துடிப்பு
அடி வைக்கும் இடமெல்லாம்
பள்ளமும் திட்டியுமாய்.....
முன்பேதும் அறியாத
முகங்களும்.......
எப்போதும் ஒலிக்காத
மொழிகளும்........
புதிதாய் நிறுவப்பட்ட
கட்டடங்களும்.......
எல்லாமே புதிதான
தோற்றத்தில்.......
உதிக்கின்ற சூரியனின்
உதயத்தில் மகிழ்வில்லை
வீசுகின்ற காற்றில்
வாசம் தெரியவில்லை
பச்சை மரங்கள்
பசுமை இழந்ததாய்......
பட்ட மரங்கள்-அதன்
கதை சொல்வதாய்.....
கரைமோதும் அலையில்
நிறைவேதும் இல்லாததாய்....
விரிகின்ற மலர்கள்
வடிவு இழந்ததாய்......
வாழ்கின்ற விலங்கினம்
வலி சுமந்ததாய்......
பறந்து செல்லும்
பறவைக்கூட்டம்
எதையோ தொலைத்ததாய்.....
கண்கள் கண்டதெல்லாம்
கதையாகிப் போனது
அப்போது.........
புரிந்தது மனசு -அங்கு
விஞ்சியிருக்கும் மனிதர்கள் -இனி
சிரிக்கவே மாட்டார்களா....?
ஏக்கத்தோடு நகர்ந்தது கால்கள்
நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!
*
இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!
*
குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!
*
உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!
*
எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்!
பார்வைகளால் கவிதை எழுதுகிறேன்.
முத்தங்களால் இசை அமைக்கிறாய்.
“சுற்றுலா போக என்னவெல்லாம்
எடுத்து வைக்க?” – அப்பாவியாய்க் கேட்கிறாய்.
இரண்டு இதயமும், ஒரு கனவும் போதாதா?
யாருக்கும் கேட்டுவிடாமல்
சத்தமின்றிதான் முத்தமிடுகிறாய்.
இருந்தும் சங்கடத்தில் நெளிகின்றன…
செல்பேசிகள் இரண்டும்!
“எப்போதென்னைக்
காதலிக்க ஆரம்பித்தாய்?”
எத்தனை முறை
கேட்டாலும் உதட்டுப் பிதுக்கலே பதிலாய்…
ம்ம்ம்…எப்போது மலர்ந்தோமென
எந்த மலருக்குதான் தெரிகிறது?
கோபம்…
சூரியனுக்கு வந்தால்
அக்னி நட்சத்திரம்.
உனக்கு வந்தால்
அக்னி நிலா!
என் பெயரை
தமிழில் இருந்து
காதலுக்கு மொழிபெயர்த்தேன்.
உன் பெயர் வந்தது!என் கண்களைக் கட்டிப்பிடித்து
உன் பார்வை செய்யும் குறும்புகள்தான்
‘கண் கட்டி வித்தை’யா?*
விழித்ததும் முத்தமிட்டுக்கொள்ள
இமைவாசலில் தவம் கிடக்கின்றன
நம் பார்வைகள்.*
நீ பார்க்கும்பொழுதெல்லாம்
கண்களை மூடிக்கொள்கிறேனா?
உன் பார்வைகளை இமைக்குள் சேமிக்கிறேன்!*
நேற்றிரவு நிலவை
நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாயா?
நிலா குளிர்ச்சியாக இருந்தது!*
செடி நீட்டும் பூவுடன் சேர்த்து
பூ நீட்டும் செடியினையும் நேசிக்க
உன் பார்வைதான் கற்றுக் கொடுத்தது.உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே
இனிப்பாய் இருக்கிறது.
நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய்
நினைத்துக்கொள்வது!*
இமைப்பொழுதிலும்
கவிதை எழுதுவேன்.
இமைப்பது நீயெனில்.*
உலகின் பெண்களுக்கெல்லாம்
உனதுருவம் அமைந்துவிட்ட மாயக்கனவிலும்…
உன்னைக் காட்டிக்கொடுத்து சிரிக்கிறது,
உனது பார்வை!*
நீ குடை விரித்ததும்
குடை சாய்ந்தது
மழை வண்டி!*
இமை மூடிய கண்களில் அரைப்பார்வையுடன்
விரல் மூடிய உள்ளங்கையில் திருநீற்றுடன்
அடிப்பிரார்த்தனைக்காக நீ சுற்றிய
கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன…
சில கவிதைகள்!
சரி
தவறு
என்ற சொற்களைக்
குற்றப் புத்தகத்திலிருந்து
நீக்கிவிடலாம்...
தவறு
இழிவான சொல் இல்லை...
சரி
உயர்வான சொல் இல்லை...
தவறை
அறிந்து செய்தால் பகை...
அறியாமல் செய்தால் பாவம்...
சரியோ,தவறோ
பாடப்புத்தகத்தில்
மட்டுமல்ல...
வேதப்புத்தகத்திலிருந்தும்
விலக்க வேண்டிய
வார்த்தைகள்...
தவறு செய்யும் பொழுது
செய்பவனுக்கு
சரியாகவே படுகிறது...
முடிந்துபோன ஒரு செயலை
மீண்டும் ஒரு முறை
செய்யும் பொது...
முன்பை விட நேர்த்தியாக
செய்வோம்...
முன்பிருந்த தவறுகள்
களையெடுக்க படுவதே
காரணம்...
எல்லா செயலும்
செய்யும் போது சரியே...
முடிந்த பிறகு
தவறாகிறது...
நீங்களோ நானோ
மீண்டும் ஒரு முறை
குழந்தை பருவத்தை
அடைந்தால்...
சில தவறுகளை
சரி செய்து வாழ்ந்து விடலாம்
எனத்தோன்றும்...
தவறு
காலம் தாழ்த்திய பிறகே
சரியாகிறது...
சரி
காலம் தாழ்த்திய பிறகே
தவறாகிறது...
சரியோ,தவறோ இவை
நிரந்தரமற்ற வார்த்தைகள்...
பாடப்புத்தகத்தில்
மட்டுமில்லை
வேதப்புத்தகத்திலிருந்தும்
விலக்க வேண்டிய
சரி,தவறு
சரியா ?
தவறா ?
(தொடரும்
Filed Under :
Friday, July 23, 2010
